ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்தப்படியாக வெளியாக இருக்கும் படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". பிரதமர் மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி ஒரு சமூக படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஸ்ரீ நாராயண் சிங் இயக்குகிறார். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படம் ஆன்லைன் லீக்காகி உள்ளது. ஆனால் இந்த விஷயம் படக்குழுவினர் கவனத்திற்கு உடனடியாக வந்ததால் மேற்கொண்டு லீக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், படம் ஆன்லைனில் லீக்கானது குறித்து உடன் தகவல் வந்தது. தற்போது அது தடுக்கப்பட்டுள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். இந்த விஷயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து உடன் நடவடிக்கை எடுத்த கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.