ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகராக இருந்த விக்ரம் பிரபு, 'ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற சொந்த பட நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் 'நெருப்புடா'. இயக்குநர் லட்சுமணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இந்தப் படத்தில் தீயணைப்பு வீரராக நடிக்கிறார் விக்ரம் பிரபு.
'சத்ரியன்' படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் தணிக்கை சமீபத்தில் முடிந்து விட்டது. 'நெருப்புடா' படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இதனால் விக்ரம் பிரபு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் வரிவிலக்கு விஷயத்தில் நிலவும் லஞ்சம் மற்றும் வரிவிலக்கு இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.