ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமந்தாவுக்கு நீண்டகாலமாகவே சருமநோய் பிரச்சனை உள்ளது. இதற்காக பல்வேறு சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டாலும், சமந்தாவுக்கு சருமப்பிரச்சனை இன்னும் முழுமையாக தீரவில்லை. குறிப்பாக வெயில் காலங்களில் பெரிதும் அவதிப்படுகிறார். இந்த பிரச்சனை காரணமாகவே ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் கடல் படங்களிலிருந்து விலகினார்.
தற்போது, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சமந்தா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்த சமந்தா, வந்த முதல்நாளே இயக்குநரை அழைத்து ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
வெயிலில் நின்று என்னால் நடிக்க முடியாது. வெயில் அதிகமாவதற்கு முன் என்னுடைய ஷாட்களை எடுத்துவிட வேண்டும். அதன்பிறகு வெயில் குறைந்த பிறகுதான் நடிக்க வருவேன் என்பதுதான் சமந்தா போட்ட கண்டிஷன். அது மட்டுமல்ல, வெயில் நேரடியாக என் மீது படாத அளவுக்கு துணியைக் கட்டி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளாராம். சமந்தா போட்ட கண்ஷனால் சிவகார்த்திகேயன் சற்று அப்செட்டாகிவிட்டாராம்.