மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கமல்ஹாசன், ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை வலுவாக வைத்து வருகிறார். அதை நிரூபியுங்கள் என்று கேட்ட அமைச்சர்களுக்கு பதில் சொல்லும் வகையில் தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர்களின் இணையதள முகவரிக்கு அதனை அனுப்பி வைக்கவும் என்று கேட்டிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் இணையதளங்களில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இமெயில் முகவரி, அலுவலக விலாசம் போன்றவை அழிக்கப்பட்டன. இதனால் புகார்களை யாருக்கு அனுப்புவது என்று தெரியாமல் ரசிகர்களும், பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில் கமல் நேற்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஊழல் புகார்களை அமைச்சர்களின் முகவரிக்கு அனுப்ப முடியாவிட்டால் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வையுங்கள்" என்று கூறியுள்ளார்.
அதோடு ஊழல் தடுப்பு பிரிவின் முகவரியையும், தொலைபேசி எண்களையும் தனது ரசிகர் மன்றங்களுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தங்கள் பகுதியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர்கள் ஊழலால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை மனுவாக எழுதி வாங்கி வருகிறார்கள். விரைவில் அதனை ஊழல் தடுப்பு பரிவுக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.