ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மொரீஷியஸ் பிலிம் டெவலப்மெண்ட் கார்பரேஷனை சேர்ந்த அதிகாரிகள் சென்னை வந்தனர். அவர்கள் இங்குள்ள ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்களைச் சுற்றிப் பார்த்தனர். தியேட்டர்களையும் சுற்றிப் பார்த்தனர். பின்னர் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தில் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, செயலாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மொரீஷியஸ் தீவில் படப்பிடிப்பு நடத்த ஏதுவான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் இருக்கிறது. அங்கு தமிழ் படப்பிடிப்பு நடத்தினால் அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். தங்கும் ஓட்டல் முதல் படப்பிடிப்பு இடங்களுக்கான வாடகை வரை 49 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும் என்று மொரீஷியஸ் அதிகாரிகள் கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதனை மற்ற தயாரிப்பாளர்களுக்கும் தெரியப்படுத்துவதாக தெரிவித்தனர். அதன் பிறகு மொரீஷியஸ் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.