ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மும்பை: சஞ்சய் தத் விதி முறைகளின்படியே முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என மகாராஷ்டிரா அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏ.கே. 56 துப்பாக்கி வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் த்த கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா கோர்ட் சிறை தண்டனை விதித்தது. மும்பை ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது பரோலில் வெளிவந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையானார். இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்ய பதில் மனு,
சஞ்சய் தத்த சிறை விதிமுறைகளின்படியே விடுதலை செய்யப்பட்டார் அவர் நன்னடத்தையுடன் இருந்ததற்கான சான்றுகள் சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டன. இதில் அவர் சிறையில் மொத்தம் 1,570 நாட்கள் இருந்துள்ளார். 256 நாட்கள் பரோலில் அவ்வப்போது வெளியேசென்றுள்ளார்.
இவ்வாறு அந்த பதில் மனுவில் மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது.