ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் எனும் புதிய பட நிறுவனம் சார்பில் சி.பிரேம் குமார் தயாரிக்கும் படம் சீமத்தண்ணி. முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் மோகன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். விதார்த், விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மசானி ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் திருமூர்த்தி இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் விஜய் மோகன் கூறியதாவது:
ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்களுக்கும், 10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் "தங்கமாரி" எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும், ரசிக்கும் படியும் உருவாகிறது. மலர்விழி எனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சாந்தினி. விரைவில் படப்பிடிப்புகள் துவங்குகிறது. என்றார்.