ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் ஜூலை 8 ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் தில் சே முதல் ஜெய் ஹோ தான் இசையமைத்த ஏராளமான பாடல்களை ரகுமான் பாடினார்.
நிகழ்ச்சியில் சில தமிழ்ப்பாடல்களையும் ரகுமான் பாடினார். இதை விரும்பாத சில ரசிகர்கள், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். சிலர் தாங்கள் அளித்த நன்கொடையை திருப்பித்தர சொல்லியும் கேட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தமிழ் பாடல்களை பாடி ரகுமான் ரசிகர்களை அவமதித்து விட்டார். ரகுமான் தன்னை தமிழன் என்றே நிலைநிறுத்திக் கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் நியூயார்க்கில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள ரகுமானிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், எனது வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். நேர்மையாக இருக்கவும் முயற்சிக்கிறேன். மக்கள் அவர்களின் ஆதரவை எந்த வகையில் தந்தாலும் அதனை நான் ஏற்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களின் ஆதரவு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அனைவரின் அன்புக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.