ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த சமந்தா, தமிழுக்கு வந்தபோது அங்கு வேகமாக வளர்ந்து முன்னணி இடத்தை பிடித்தவர் ராகுல்பிரித்சிங். அதற்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் ராகுல்பிரித்சிங்.
அந்தவகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் நடித்து வந்தபோது, விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்சீட் பிரச்சினையால் ராகுல்பிரித்சிங் அப்படத்தில் நடிக்கவில்லை.
அதையடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற தமிழ்ப்படத்தில் கமிட்டாகி விட்டார். புலனாய்வு கதையில் உருவாகும் இந்த படத்தில் டிஎஸ்பியாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் ராகுல்பிரித்சிங்கும் போலீசாக நடிப்பதாக இப்போது செய்தி வெளியாகியுள்ளன. ஆக, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்குப்பிறகு தெலுங்கைப்போலவே தமிழிலும் முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடலாம் என்று எதிர்பார்க்கிறார் ராகுல்பிரித்சிங்.