சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அசாதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரை விட தமிழகத்தில் ஊழல் மிஞ்சிவிட்டது, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என கமல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியில் கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்விபரம் வருமாறு... "அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை நடிகர் கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும். ஊழல் இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? சினிமா துறையினருக்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து கமல் இதுபோன்று பேசி வந்தால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அவர் கூறினார்.