ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பாவனா கடத்தல், திலீப் கைது விவகாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல் "பாவனா கடத்தப்பட்டதும் துன்புறுத்தப்பட்டதும் அநீதி. சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. கேரள காவல்துறைக்கு என் பாராட்டுகள்" என்றார்.
பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களின் பெயரை பொது வெளியில் சொல்வது தண்டனைக்குரிய குற்றம். அதனால் கமல், பாவனா பெயரை குறிப்பிட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவி லலிதா குமாரமங்கலம், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது வேறு யாருமோ கமல் மீது வழக்கு தொடரலாம் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கமல் நேற்று தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கேட்பேன். சட்டத்தை விட உயர்வானவர்கள் யாரும் இல்லை. நான் பெண்களை நேசிப்பவன். அவர்கள் உரிமைக்காக போராடுகிறவன். யாருக்கும் பயப்படுகிறவனும் அல்ல. இது குற்றவாளிகளை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பது போல இருக்கிறது என்று எழுதியுள்ளார்.