ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, முதன்முறையாக தமிழகத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் ஆரம்பமானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிகழ்ச்சி, தமிழ் கலாச்சாரத்திற்கு சீர்கேடானது, பிக்பாஸை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட போட்டியாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் இருதினங்களுக்கு முன்னர் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தன் தரப்பு வாதத்தை ஆவேசமாக முன் வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி ரகுராம், "சேரி பிஹேவியர்" என்ற பேசியதும் கண்டத்திற்கு உள்ளாக, அவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்பு ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டிற்கு காலை முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போலீஸ்க்கு கிடைத்த தகவலின் படியே இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கமல் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு கமல் மற்றும் பிக்பாஸ்க்கு எதிராக முழக்கங்கள் இட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கமல் வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேப்போன்று நிகழ்ச்சியை நடத்தும் விஜய் டிவி அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.