ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை பார்த்த, தமிழ் சினிமா ரசிகர்கள், அதில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி, தமிழ் படங்களில் நடிக்க மாட்டாரா என, ஏங்கினர். சரியான கதை அமையாததால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் சாய் பல்லவி. ஆனால், தெலுங்கு, மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தெலுங்கில், வருண் தேஜா ஜோடியாக, சாய் பல்லவி நடித்து வரும், பிடா என்ற படம், டோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூட்டோடு, தமிழிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அவர்.
விஜய் இயக்கும், கரு என்ற படத்தில், பிரபுதேவா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறாராம். 'நடனத்தில் அசாத்திய திறமை வாய்ந்த பிரபுதேவாவும், சாய் பல்லவியும் நடிப்பதால், இந்த படத்தின் கதையில், கண்டிப்பாக நடனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்' என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.