மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மாஜி நடிகை கஸ்தூரி, சமீபகாலமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பான நடிகையாகியிருக்கிறார். அந்த வகையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டு ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் கஸ்தூரி. அதன்பிறகு ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்தநிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி இந்து மத கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளது. அதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். அதை நடத்தும் நடிகர் கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, கஸ்தூரி தனது டுவிட்டரில், "பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏற்கனவே 100 நாள் வீட்டு காவலில் தான் உள்ளனர், அவர்களை ஏன் கைது செய்யவேண்டும்? முதல்ல கலாச்சார தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்தனும். இந்து மதம் ஒன்னும் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல, வேலி போட்டு காக்க" என்று கூறியுள்ளார்.