சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
யூ டியூப்பில் சாங் வீடியோ அப்லோட் பண்ணிக்கொண்டிருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதியை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் சுந்தர்.சி. இப்போது அவரே ஆதியை, இயக்குனராகவும், ஹீரோவாகவும் அறிமுகப்படுத்துகிறார். இதற்கு சுந்தர்.சி அளித்த விளக்கம் வருமாறு:
"கிளப்புல மப்புல" பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப் ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன். அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தர்வர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ், டீ- ஷார்ட் போட்டுக்கொண்டு என்னை சந்திக்க வந்தார் ஆதி. ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்று கூறினேன். முதலில் ஆம்பள படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்று இருந்தேன். ஆதி இசையமைத்த "பழகிக்கலாம்" பாடலை கேட்டேன் நன்றாக இருந்தது.
அதன் பின் ஆதி "நான் தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன்" என்று என்னிடம் கூறினார். நானும் அவரிடம் சரி என்றேன். அவர் சொன்னது போலவே ஆம்பள படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. அதன்பின் ஆம்பள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆதியை நான் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று கூறினேன். சொன்னது இன்று நிறைவேறிவிட்டது ஆதி இன்று கதாநாயகனாக, இயக்குநராக அறிமுகமாகிறார்.
மீசைய முறுக்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோகிராபி திரைப்படம் போல் இருக்கும். கொஞ்சம் கற்பனை கதை, நிறைய உண்மை கதை, இது தான் மீசைய முறுக்கு திரைப்படம். ஆதி இந்த கதையை என்னிடம் கூறியதும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆதியை மிகப்பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆதி தன்னோடு மியூசிக் வீடியோவில் பயணித்த அதே டீமோடு பயணிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார், அவர் சொன்னது போலவே இந்த குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது என்கிறார் சுந்தர்.சி.