ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில் திலீப்பின் மகள் மீனாட்சி நிலைதான் மிகவும் பரிதாபகரமாக இருப்பதாக திலீப்பின் நட்பு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
திலீப் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரை விவாகரத்து செய்ய முடிவு செய்து, மஞ்சுவை விட்டு பிரிந்தபோதே அவரது மகள் மீனாட்சியும் தனது தந்தையுடனேயே வந்துவிட்டார். விவாகரத்து கிடைத்த பின்னும் கூட அவர் மஞ்சுவிடம் செல்லவில்லை.. மஞ்சுவும், மீனாட்சியின் மனநிலை புரிந்ததால், மகள் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என வீம்பு பிடிக்காமல் அமைதியாக இருந்துவிட்டார்.
இதையடுத்து திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்ட நிகழ்வில் மகள் மீனாட்சியின் பங்கும் மிக முக்கியமானது. மீனாட்சியின் முழு சம்மதத்துடன் தான் அவர் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டுள்ளார். திலீப் தற்போது சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் காவ்யா மாதவனுக்கும் இந்த சதியில் தொடர்பு இருக்கலாம் என்பதால் போலீஸார் அவரையும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் காவ்யா மாதவன் தற்போது தலைமறைவாக இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
தனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கும், அதிலும் ஒரு பெண் தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்தநிலையில் மீனாட்சி பற்றிய தகவல் எதுவுமே மீடியாவில் வெளியாகவில்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழலில் அவர் மீண்டும் தனது அம்மா மஞ்சு வாயரிடம் செல்வது தான் சரியாக இருக்கும் என பலரும் சொல்கின்றனர். அதேசமயம் மஞ்சு வாரியர் தனது மகள் தன்னுடன் இருக்கட்டும் என நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை.
திலீப்பின் கைது குறித்து மஞ்சு வாரியர் வருத்தப்பட்டாரே தவிர அவருக்கு இதில் துளியும் மகிழ்ச்சி இல்லை என்றே மஞ்சு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.. எது எப்படி இருப்பினும் மீனாட்சி குறித்து மஞ்சு வாரியர் விரைவில் முடிவெடுப்பார் என்றே அவர்களது உறவினரும் திரையுலகத்தினரும் எதிர்பார்க்கிறார்கள்.