ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி அடுத்து இயக்கப் போகும் படத்தைப் பற்றி தற்போது டோலிவுட்டில் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜுனியர் என்டிஆர் ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து அதிகமாக விவாதித்து வருகிறார்கள். இருவரது ரசிகர்களுமே அவர்களது அபிமான ஹீரோதான் ராஜமௌலியின் அடுத்த பட ஹீரோ என்று சொல்லி வருகிறார்கள்.
ஆனால், ராஜமௌலி அவருடைய அடுத்த படத்தில் மூன்று மொழியிலிருந்து ஹீரோக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கப் போகிறார் என்கிறார்கள். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் 'பாகுபலி 2' பெரிய வரவேற்பைப் பெற்றதால் அடுத்த படத்தை மூன்று மொழிகளிலுமே நேரடியாக உருவாக்க இருக்கிறாராம். மூன்று ஹீரோக்களும் ஒரே படத்தில் நடிப்பார்களா அல்லது அந்தந்த மொழிக்கு ஒரு ஹீரோவா என்பது இனிமேல்தான் தெரிய வரும் என்கிறார்கள்.
'பாகுபலி 2' படம் ஏறக்குறைய ஓடி முடிந்துவிட்டதால், தற்போது ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி தெலுங்கு ஹீரோக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். ஆனால், ராஜமௌலி இன்னும் சில மாதங்கள் கழித்தே அவருடைய அடுத்த படத்தைப் பற்றி அறிவிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாம்.