‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
இதோ அதோ என போக்கு காட்டிக்கொண்டு இருந்த பாவனா கடத்தல் விவகாரத்தில் எதிர்பாராத அதிரடி திருப்பமாக மலையாள நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை கவனமாக ஆராய்ந்து, இதில் திலீப்பின் பங்கு உறுதியாக இருக்கிறது என்பது தெரிந்தே திலீப்பை கஸ்டடியில் எடுக்க உத்தரவிட்டாராம் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா..
திலீப்பை இந்த வழக்கில் கைது செய்யும் அளவுக்கு போலீஸுக்கு வலுவான 5 விஷயங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதை செய்யப்பட்ட சமயத்தில் அவற்றை புகைப்படமாகவும் வீடியோவாகவும் பல்சர் சுனில் படம் எடுத்த மெமரிகார்டு, இதை திலீப்பின் உறவினர் வசம் பல்சர் சுனில் ஒப்படைத்திருந்ததாக கூற, அதை கைப்பற்றினர் போலீஸார். அதில் நடந்த சில உரையாடல்கள் திலீப்பை தொடர்புபடுத்துவதாக இருந்ததாம்.
திலீப்புக்கு நெருக்கமான ஆட்களான அவரது நண்பர் இயக்குனர் நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி ஆகியோரிடம் பல்சர் சுனில் அடிக்கடி போனில் பேசியதற்கான ஆதாராங்களும் வலுவாக இருந்ததாம்.
பல்சர் சுனில் ஜெயிலில் இருந்தபோது ஜெயில் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட சில தகவல்களும் ரெக்கார்டு செய்யப்பட்டனவாம். போலீசாரே ஜெயிலில் தங்களது தரப்பு ஆட்களை கைதிகள் போல பல்சர் சுனிலுடன் பழகவிட்டார்கள் என்றும், அவர்கள் மூலமாகவே பல்சர் சுனிலுக்கு ஜெயிலுக்குள் செல்போன் தரப்பட்டு, அதன்மூலம் அவன் யார் யாரிடம் பேசுகிறான் என்பதையும் ட்ரேஸ் செய்தார்களாம்.
அதேபோல பல்சர் சுனில் கைது செய்யப்படுவதற்கு முன்பு, பவானா கடத்தப்படுவதற்கு முன்பு என அந்த காலகட்டங்களில் திலீப் வீடு இருந்த பகுதிக்கு பல்சர் சுனில் வந்து சென்றதும் கூட அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்ததாம்.. மேலும் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு சொந்தமான லக்சயா' என்கிற நிறுவனத்தின் அருகில் இருந்த சிசிடிவி பதிவு காட்சிகளில் திலீப்பின் உறவினர் ஒருவர் பல்சர் சுனிலுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றதாம். அவற்றையும் போலீஸார் ஆதாரமாக்கி விட்டார்களாம்.
அடுத்தது திலீப், சமீபத்தில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலமும், அவரது நண்பர் நாதிர்ஷா அளித்த வாக்குமூலமும் நிறையவே வித்தியாசப்பட்டனவாம்.. அதுமட்டுமல்ல திலீப் விசாரணையின்போது சொன்ன சில தகவல்களே அவருக்கு எதிரான ஆதாரமாக அமைந்துவிட்டது என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.