ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கதாநாயகியாக அறிமுகமான கொஞ்ச காலம் வரை டூயட் பாடும் நடிகைகள் ஒருகட்டத்திற்கு பிறகு வில்லி வேடம் என்றால் கூட ஒகே சொல்லி விடுகிறார்கள். கொடி படத்தில் த்ரிஷா நடித்ததுகூட அப்படித்தான். அந்தவகையில் நடிகை ஹன்சிகாவும் தற்போது நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார். ஆனால் தமிழில் அல்ல, மலையாளத்தில் உருவாகிவரும் 'வில்லன்' என்கிற படத்தில். அதுவும் மோகன்லால், விஷால், இயக்குனர் உன்னிகிருஷ்ணன் என்கிற மிகப்பெரிய கூட்டணியுடன்.. இந்த அனுபவம் பற்றி ஹன்ஷிகா என்ன சொல்கிறார்..?
“எனது கேரியரில் நான் ஒருமுறையாவது மலையாளத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்று என் அம்மா சொல்வார். அதற்கேற்ற மாதிரி இதுவரை நான் நடிக்காத கேரக்டர் ஒன்றை பற்றி இயக்குனர் உன்னிகிருஷ்ணன் சொன்னபோது அதை எப்படி ஒதுக்க முடியும்..? நெகடிவ் என முற்றிலும் சொல்லமுடியாத, அதேசமயம் கொஞ்சம் வில்லித்தனம் கலந்த கேரக்டரில் தான் நடிக்கிறேன்.
விஷால் எனக்கு மறுநாள் தான் செட்டிற்கு வந்தார். வந்ததும் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும், எங்கே கசாமுசா என சத்தம் வந்து கொண்டிருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் ஹன்சிகா இருக்கிறார் என்று அர்த்தம் என சொல்லி என்னை கிண்டலடித்து கொண்டு இருந்தார்.. மலையாளம் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கும் என என் நண்பர்கள் என்னை பயமுறுத்தினார்கள்.. ஆனால் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் அந்த பயத்தை போக்கிவிட்டார்” என 'வில்லன்' அனுபவத்தை விவரிக்கிறார் ஹன்சிகா.