ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். மிகக் குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டுமே 3 கோடிக்கு விற்கப்பட்டது. படமும் அதற்கு மேல் வசூலை அள்ளியது.
அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்து வெளிவந்த '10 எண்றதுக்குள்ள' படம் வெளிவந்து படுதோல்வியைத் தழுவியது. இருந்தாலும், விஜய் மில்டன் அடுத்து இயக்கிய 'கடுகு' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இப்போது 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை இன்று முதல் ஆரம்பித்திருக்கிறார். இப்படம் பற்றிய தகவலை விஜய் மில்டன் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய நண்பர், இயக்குனர் சுசீந்திரன் இன்று ஆரம்பமாகும் அப்படத்திற்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தி மூலம் இது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
'கோலி சோடா 2' படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிக்கிறார்களா அல்லது வேறு யாரும் நடிக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.