ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஸ்ரீதேவியைத்தான் கேட்டார்கள். ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், தங்குவதற்கு நட்சத்திர ஓட்டலில் பிரத்தியேக தளம் ஒன்றைக் கேட்டதாகவும், ஹிந்தி டப்பிங் உரிமையை கேட்டதாகவும் செய்திகள் வந்தன. படத்தின் இயக்குனர் ராஜமவுலியும் பட வெளியீட்டிற்கு முன்பாக ஒரு பேட்டியில் ஸ்ரீதேவி பற்றி விமர்சித்திருந்தார்.
ராஜமவுலியின் கருத்திற்கு சமீபத்தில் ஸ்ரீதேவியும் கண்டனம் தெரிவித்திருந்தார். ராஜமவுலி ஏன் இப்படிப் பேசினார் என்று தெரியவில்லை, அவர் மீது நான் நல்ல மரியாதை வைத்திருந்தேன் என்றார்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமவுலி, ஸ்ரீதேவி பற்றி பேசியது தவறு என்று கூறியுள்ளார். “யாருடைய பேச்சை நம்புவது என்பது குறித்து மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நான் ஸ்ரீதேவி பற்றி பொதுமக்களின் முன்னிலையில் அந்த விவரங்களைப் பற்றிப் பேசியிருக்கக் கூடாது. அது தவறு, அதற்கு வருந்துகிறேன்,” என ராஜமவுலி பேட்டி அளித்துள்ளார்.
“ஸ்ரீதேவி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். மும்பையில் பல வருடங்களாக தென்னிந்தியத் திரையுலகத்தின் கொடியை அவர்தான் சுமந்து வருகிறார். அவர் நடித்துள்ள 'மாம்' படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜமவுலியின் வருத்தத்தால் இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.