Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதனையின் சிகரம் இயக்குனர் பாலசந்தர்: வைரமுத்து

09 ஜூலை, 2017 - 20:43 IST
எழுத்தின் அளவு:
director-k.balachander-statue-opened

திருவாரூர்:நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் போன்ற சாம்ராஜ்யங்களை தாண்டி, சாதனையின் சிகரமாக பாலசந்தர் திகழ்ந்தார் என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த நல்லமாங்குடியில் பிறந்தவர், மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை துவங்கிய அவர், தமிழ் திரைப்படத் துறையில் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் என, பன்முகம் கொண்டு செயல்பட்டார்.

தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்று, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல நடிகர்கள், நடிகைகளை சினிமாத் துறையில் ஜொலிக்க வைத்தவர். இவர் பிறந்த வீடு, தற்போது, தனியார் பள்ளியாக இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில், பாலச்சந்தர் வெண்கல உருவச் சிலையை கவிஞர் வைரமுத்து நிறுவியுள்ளார்.இதன் திறப்பு விழா, அவரது பிறந்த நாளான நேற்று நடைபெற்றது. சிலையை, பாலசந்தர் மனைவி ராஜம் திறந்து வைத்தார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

பாலசந்தர் தனி மனிதர் அல்ல; அவர் ஒரு நிறுவனம். அவரது வாழ்க்கையை இளைஞர்கள் பாடமாக கொள்ள வேண்டும். பாலசந்தர் ஒரு குறியீடு. அவர், நிறுவனங்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்ற சாம்ராஜ்ஜியங்களை தாண்டி புகழ்கொடி நாட்டி, சாதனையின் சிகரமாக திகழ்ந்தார். திரைப்பட துறையில் அர்த்தமற்ற நம்பிக்கையை உடைத்தவர். மூடநம்பிக்கையை தகர்த்தவர்.

இந்த ஊருக்கு பாலசந்தர் என்ன செய்தார் என்று முணுமுணுப்பதாக தெரியவந்துள்ளது. அவரை அரசியல்வாதி ஆக்கி விடாதீர்கள். அவர் ஒரு கலைஞர். ஊருக்கு நல்லது செய்ய அவர் கவுன்சிலரோ, எம்.எல்.ஏ.,வோ அல்ல. சினிமாவில் ஜெயிப்பது என்பது முள்ளில் நடந்து தேன் எடுப்பது போன்று. பாலசந்தர் நல்லுமாங்குடி சொத்து மட்டும் அல்ல. அவர் தேசிய சொத்து.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர் மணிரத்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in