மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முன்னணி நடிகர் திலீப், அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் மற்றும் திலீப்பின் திரையுலக நண்பர்கள் சிலர் இப்போது விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார்கள். திலீபுக்கு எதிராக பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலம்தான் வழக்கை துரிதப்படுத்த உதவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட சுனில் "இன்னும் சில சுறாக்கள் இந்த வழக்கில் சிக்கும்" என்றான். இதனால் இன்னும் பரபரப்பானது.
ஆனால் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பல்சர் சுனில் தனக்கு எதுவுமே தெரியாது. இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பலிகடாவாக்கி பல முன்னணி நட்சத்திரங்களை இதில் சிக்க வைக்க நினைக்கிறார்கள். என்று கூற ஆரம்பித்திருக்கிறானாம்.
பல்சர் சுனில் திலீபிடம் பணம் கேட்டு கடிதம் எழுதியதும். திலீப் போலீசில் புகார் செய்ததும் நடந்தது. தற்போது சில மலையாள முன்னணி நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் இந்த வழக்கிற்குள் வந்திருக்கிறார்களாம். புரோக்கர்கள் மூலம் பல்சர் சுனிலுக்கும் அவனது கூட்டாளிக்கும் பெருந் தொகை கொடுக்க இருப்பதாகவும், சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் விடுதலைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறப்பட்டிருக்கிறதாம்.
இதன் காரணமாகவே போலீஸ் தரப்பு சாட்சியமாக மாற இருந்த சுனில் இப்போது போலீசுக்கு எதிராக பேச ஆரம்பித்திருக்கிறாராம். பல்சர் சுனில் வாக்குமூலம் தவிர திலீபுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் எதுவும் போலீசிடம் இல்லை. இதனால் அடுத்து இந்த வழக்கை எப்படி எடுத்துச் செல்வது என்பதில் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.