ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது வசீகர குரலால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி, கடந்த 2013ல் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான செல்லுலாய்ட் படத்தில் காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தனது காந்தக் குரலால் ரசிகர்கள் மனதை ஆட்கொண்டார்.
இவர், தமிழிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார். இசையுலகில் இவரது சாதனைகளை பாராட்டி இவரை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த உலக தமிழ் பல்கலை கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்த பட்டம் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. சமீபத்தில் கூட கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணை மூலம் பாடல்களை பாடி புதிய சாதனையை படைத்துள்ளார். இதில் மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடிய 67 பாடல்களும் மற்றும் 12 கீர்த்தனைகளும் அடங்கும்..