அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சிவாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் பாத்சாகோ. மிலன் லூதிரா இயக்கும் இப்படத்தில் அஜய் உடன் இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இலியானா, இஷா குப்தா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை எப்படி உருவானது என்று இயக்குநர் மிலன் லூதிரா கூறியிருக்கிறார்.
அவர் கூறுகையில், நான் கச்சே தாகி படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது விநியோகஸ்தர் ஒருவர் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் ராஜஸ்தானில் நடந்த பல்வேறு சம்பவங்களை கூறினார். இதை நான் படமாக எடுக்க எண்ணினேன். ஆனால் டாக்ஸி நம்பர் 9211, ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என் மும்பை, டர்ட்டி பிக்சர்ஸ் என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாகிவிட்டதால் இதை அப்படியே விட்டுவிட்டேன். இருந்தாலும் நல்ல கதைகள் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது. இப்போதை அதை திரைப்படமாக எடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.