ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. சினிமா துறையை பொறுத்தமட்டில் 18, 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி போக தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக இன்று முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு நல்ல முடிவு எடுத்தால் மட்டுமே தியேட்டர் வாபஸ் பெறப்படும் என தியேட்டர் அதிபர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரும் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "48 முதல் 58 சதவீதம் வரி என்பது மிகவும் அதிகம், தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்" என்று கூறியுள்ளார்.