ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பல பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அவரோடு பணியாற்றிவர்களுக்கு விருது கொடுத்து கவுரவியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடுவதாக அறிவித்துள்ளது. மனிதநேயத்தின் வடிவமாக திகழ்ந்த அவரின் நூற்றாண்டு விழாவை சம்பிரதாயமாக மட்டும் கொண்டாடாமல், மன ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும். அந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றிய பாடலாசிரியர்கள், உரையாடல் ஆசிரியர்கள், ஆகியோரில் ஒரு சிலருக்காவது சிறப்பு விருது வழங்கி குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்குங்கள்.
கொடைகுணம் கொண்ட எம்.ஜி.ஆரை சிறப்பிக்க இதைவிட பொருத்தமான செயல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின் புகழுக்கு எங்களைப் போன்றவர்களின் எழுத்துதான் காரணம் என்பது எம்.ஜி.ஆருக்கே தெரியும். அமைச்சர்களை வைத்து ஏதோ ஒரு நாள் கூட்டம் நடத்திவிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நாங்களும் கொண்டாடினோம் என்பது அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்காது. இதை அதிமுகவின் இரண்டு அணிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முத்துலிங்கம் கூறியுள்ளார்.