விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாவனா கடத்தல் வழக்கு சூடுபிடித்துள்ள இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகையும், நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியுமான காவ்யா மாதவன் கொச்சியில் நடத்தி வரும் ஆன்லைன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அது ஏன் என்பது பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நடிகை பாவனாவை ஆபாச படம் எடுத்த செல்போனை ஆற்றில் வீசிவிட்டதாக பல்சர் சுனில் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தான். அவன் சொன்ன இடத்தில் சல்லடை போட்டு தேடியும் போன் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்சர் சுனிலிடம் தக்கபடி போலீசார் விசாரித்ததில் பாவனாவின் ஆபாச படம் பதிவான மெம்மரி கார்டை ஏற்கெனவே போட்ட திட்டப்படி காவ்யா மாதவனின் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் ஒப்படைத்தாக கூறியுள்ளான்.
இதனால் தான் போலீசார் காவ்யா மாதவனின் நிறுவனத்தில் சோதனையிட்டுள்ளனர். அங்கு மெம்ரி கார்ட் சிக்கியதா இல்லையா என்பதை பற்றி போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் காவ்யா மாதவனின் வீட்டையும் சோதனையிட போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு நடிகை கடத்தப்பட்ட வழக்கில் மலையாள சினிமாவின் முன்னணி நடிரும், நடிகையும் சிக்கி இருப்பது மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.