ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, அதன் அடிப்படையில் பெப்சி தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அதன் தலைவராக உள்ளார். தற்போது அவர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது:
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் தனது சங்கத்தின் பெயரை புதுப்பிக்க தவறிவிட்டது. அந்த பெயரை பரமக்குடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பெற்று விட்டார். இதனால் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பதிவு செய்யப்படாத சங்கமாகிவிட்டது. இந்த நிலையில்தான் ஆர்.கே.செல்வமணி பெப்சி தலைவருக்கு போட்டியிட்டார். பதிவு செய்யப்படாத சங்கத்திலிருந்து ஆர்.கே.செல்வமணி போட்டியிடக்கூடாது என்று கார்த்திகேயன் பெப்சிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அந்த கடிதத்தை பெப்சி பெரிதுபடுத்தவில்லை. ஆர்.கே.செல்வமணியும் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார்.
இதனால் ஆர்.கே.செல்வமணி பெப்சி தலைவரானதை எதிர்த்து கார்த்திகேயன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பதிவு செய்யப்படாத ஒரு சங்கத்திலிருந்து விதிகளுக்கு புறம்பாக ஆர்.கே.செல்வமணி பெப்சி தேர்தலில் போட்டியிட்டு தலைவராக நீடிக்கிறார் இது செல்லாது என்று தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் ஆர்.கே.செல்வமணி பெப்சி தலைவரானது சங்க விதிகளின்படி செல்லாது என்ற அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பொதுக்குழுவை விரைவில் கூட்ட பெப்சி ஏற்பாடு செய்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்பு ஆர்.கே.செல்வமணிக்கு பாதகமாக வந்தால் மறு தேர்தல் அறிவித்து ஆர்.கே. செல்வமணியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.