ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் 60 நாட்களை கடந்தும் இந்தியாவில் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 1700 கோடி ரூபாய் வரை உலக அளவில் வசூலித்துள்ள இந்தப் படம், தற்போது அடுத்த உலக வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. அந்த வரிசையில் இன்று தைவான் நாட்டில் சுமார் 15 இடங்களில் இப்படம் வெளியாகியுள்ளது. இன்றிலிருந்து அடுத்த வாரம் 6ம் தேதி வரையில் சுமார் 168 காட்சிகள் இப்படம் திரையிடப்பட உள்ளது.
இன்று காலை படத்தின் முதல் காட்சியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய திரையுலகில் 'பாகுபலி 2' படம் மிகப் பிரம்மாண்டமான படம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள். தைவான் நாட்டில் 'பாகுபலி 2' படம் வெற்றி பெற்றால் அடுத்து சீனா நாட்டில் செப்டம்பர் மாதம் வெளியாகும் போது கண்டிப்பாக வெற்றி பெறும். இரு நாட்டு மக்களின் கலாச்சாரம் ஏறக்குறைய ஒன்றுதான், ரசனையும் ஒன்றுதான்.
'தங்கல்' படம் சீனாவில் 1000 கோடி வசூலைத் தாண்டி மொத்தமாக 2000 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்த சாதனையை 'பாகுபலி 2' முறியடிக்க வேண்டுமென்றால் சீனாவில் வெளியாகும் போது அதிகமாக வசூலிக்க வேண்டும். அதற்கு இன்றைய தைவான் நாட்டில் வெளியானதன் ரிசல்ட் மிகவும் அவசியமான ஒன்று.