மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் பிரமான நடிகை தபு. தென்னிந்தியாவை விட பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கோல்மால் அகைன் படத்தில் நடித்து வருகிறார். 45 வயதை கடந்துவிட்ட தபு, இன்னும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தான் காரணம் என்கிறார்.
இதுகுறித்து தபு மேலும் கூறியிருப்பதாவது... "அஜய்யை எனக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். எனது வாழ்க்கை தொடக்கத்தில் இருந்தே அஜய்தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார். அஜய் எனது உறவினர் சமீர் ஆர்யாவின் நண்பர். ஆகையால் எனக்கும் நெருங்கிய நண்பராகிவிட்டார். நான் எங்கு சென்றாலும் அஜய் மற்றும் சமீர் இருவரும் உடன் வருவார்கள், என்னை கண்காணிப்பார்கள். ஏதாவது ஒரு பையன் என்னுடன் பேசினாலோ அல்லது யாராவது கேலி செய்தார்களோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களை பிடித்து மிரட்டுவர்.
இன்றைக்கு நான் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்றால் அதற்கு அஜய் தான் காரணம். பின்னொரு நாளில் அஜய்யிடம் எனக்கு ஒரு நல்ல பையனாக பார் என்று அவரிடமே கூறினேன்" என்று கூறியுள்ளார்.
தபு இப்படி பேசியிருப்பது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.