ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டிரான்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ராஜேந்திரா எம்.ராஜன், புனிதா ராஜன் தயாரித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். இஷாக் என்பவர் இயக்கி உள்ளார். ஆரி, ஆஸ்னா ஜவேரி, லதா, சித்தாரா, காளி வெங்கட், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தடைகேட்டு நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
என்னுடைய தந்தை நாகேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். அவர் சென்னை டி.நகரில் நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு தியேட்டரை கட்டி நடத்தினார். தற்போது அந்த தியேட்டரின் பெயரிலேயே நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்த பெயரை வைப்பதற்கு படத்தின் சார்பில் யாரும் எங்கள் குடும்பத்திடம் அனுமதி பெறவில்லை.
எனது தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும். எங்கள் அனுமதி இன்றி நாகேஷ் திரையரங்கம் என்று தலைப்பு வைத்ததற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்கும்படி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.