பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில் விஜய்யின் 62-ஆவது படம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார் விஜய். அந்தப் படங்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாவதுமுறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் கதை இன்னும் முடிவாகவில்லை. அதற்கு முன்பாக, படத்தின் பட்ஜெட் 150 கோடி என்பதை மட்டும் தீர்மானித்துவிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தப் படத்தை தானே தயாரிக்க திட்டமிட்டார் முருகதாஸ். இதற்கிடையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'விஜய்-62' படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது. அவ்வளவு பெரிய முதலீட்டைக் கொட்டி தானே படமெடுப்பதைவிட சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படத்தை எடுப்பதே புத்திசாலித்தனம் என்று நினைத்து ஓகே சொல்லிவிட்டார் முருகதாஸ்.
விஜய் நடிப்பில் 'வேட்டைக்காரன்', 'சுறா' ஆகிய படங்களை ஏற்கெனவே தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் விஜய் உடன் இணையும் மூன்றாவது படம் இது.