ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யின் கேரியரில் துப்பாக்கி, கத்தி படங்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டு படங்களையுமே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். 2012-ல் துப்பாக்கியை இயக்கிய நிலையில், இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கத்தி படத்தை விஜய்யை வைத்து இயக்கினார். இந்தநிலையில், மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை கத்தியை தயாரித்த லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது.
துப்பாக்கியில் ராணுவ வீரராகவும், கத்தியில் விவசாயிகளுக்காக போராடும் இளைஞராகவும் நடித்த விஜய், இந்த படத்திலும் சமூக நோக்கமுள்ள ஒரு கதையில் நடிக்கிறாராம். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் அக்டோபரில் திரைக்கு வரும் நிலையில், உடனடியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும் அதே அக்டோபர் மாதத்தில் நடிக்கிறார் விஜய். அதனால் தற்போது ஸ்பைடர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள முருகதாஸ், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் விஜய் படத்திற்கான கதை வேலைகளில் இறங்குகிறாராம்.