பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
இறைவி படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் இயக்கியுள்ள படம் மெர்குரி. அதோடு தனது ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் சார்பில் மேயாதமான் என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். இந்த படங்கள் குறித்தஅறிமுக விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,
ஒவ்வொருத்தருமே தங்களுக்குள் இருக்கும் பேஷனை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு மாதிரி போராடுவார்கள். அதில் ஸ்ட்ராங்கா போராடுறவங்கதான் ஜெயிப்பாங்க. அப்படிப்படட பாதையில் வந்தவர்தான் கார்த்திக் சுப்புராஜ். டிஜிட்டலில் ஒரு கோடியில் படமெடுக்க முடியும். பெரிய படங்களோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் அவர்தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் அவர். காரணம், நான் நடிப்பில் எவ்ளோ பேஷன் உள்ளவன் என்பது தெரியும். டயலாக்கே இல்லேன்னாகூட வாயை அசைப் பேன். டப்பிங்கில் ஏதாவது போடுவார்கள் என்று நானாக பேசுவேன். ஒருகாலத்தில் நான் நடிக்க வந்தபோது இவன் ஏன்டா நடிக்க வர்றான் டைரக்சன் பண்ணலாமே என்று என் காது படவே சொல்லி வலியை கொடுத்தார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி எஸ்.ஜே.சூர்யாவினால் நடிக்க முடியும் என்று நம்பி இறைவி படத்தில் நடிக்க வைத்து என்னை உலகத்துக்கு காட்டியவர் கார்த்திக் சுப்புராஜ்.
அவர் உருவாக்கியுள்ள இந்த ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வது எனது பேமிலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல்தான் உள்ளது. இந்த கம்பெனிக்காக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள மேயாதமான் படத்தின் கதையை அவர் ஒருநாள் என்னிடம் சொன்னார். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். அதோடு பிரபுதேவாவை வைத்து மெர்குரி என்ற படத்தை பண்ணியிருக்கிறார்.
இந்த படம் கண்டிப்பாக ரெக்கார்ட் பிரேக் பண்ணும். அவர் தற்போது தயாரிக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைக்களங்கள். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்கள் கூட தயாரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.அந்த விழாவிலும் நான் வந்து பேசுவேன் என்றார்.