ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தியில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் ஒளிப்பரப்பாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது. பிக்பாஸ் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது கமல் பேசியதாவது...
"நான் டி.வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறை பங்கேற்கப்போகும் 14 பேர் யார் என்பது எனக்குத் தெரியாது. டி.வி.நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் நான் இறங்கி வந்து விட்டதாக கருத வேண்டாம், ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெரிய நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். நான் இதனை பெருமையாகத்தான் நினைக்கிறேன். சின்னத்திரை மட்டுமல்ல செல்போனுக்குள்ளும் செல்ல எனக்கு ஆசை. நிச்சயம் அதுவும் நடக்கும்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் விஸ்வரூம் 2 பணிகளை தொடங்குகிறேன். அதன் பிறகு சபாஷ் நாயுடு பணிகள் தொடங்கும்". மேலும் மருதநாயகம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் சொல்லமுடியாது எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் சின்னத்திரை கூட அதற்கு உதவலாம் என்றார்.