ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல சின்னத்திரை நடிகை மவுனி ராய். தமிழில் வெளியான நாகினி சீரியலில் பாம்பாக நடித்து பிரபலமானவர். இவர், வெள்ளித்திரையில் அறிமுகமாக இருப்பதாகவும், நடிகர் சல்மான்கான் இவரை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இவர் அக்ஷ்ய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் ரீமா காக்தி, அக்ஷ்ய் குமாரை கொண்டு "கோல்டு" என்ற படத்தை இயக்குகிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பல்பீர் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இதில் பல்வீர் சிங் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க அவருக்கு ஜோடியாக மவுனி ராய் நடிக்க உள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் மவுனி ராய். சுமார் 20 முதல் 25 நாட்கள் தனக்கான கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். கோல்டு படத்தை எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாக உள்ளது.