ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாரின் நண்பராக அறிமுகமானவர் சவுந்தர்ராஜா. அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் நடித்தார். கவுண்டமணி நடித்த எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படத்தில் இளம் ஹீரோவாக நடிகத்தார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த தங்கரதம் படம் வெளிவந்தது. இதில் அவர் நடிப்பு பாரட்டும்படி இருந்தது. தற்போது ஒரு கனவு போல படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இதுப்பற்றி சவுந்தர்ராஜா கூறியதாவது...
என்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன். அதனால் எந்த இமேஜும் வைத்துக்கொள்ளாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தேன். என் முகம் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்தபின் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைத்தேன். இப்போது ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நடிகனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன். 'தங்க ரதம்' படத்தில் என் நடிப்பிற்கு கிடைத்துள்ள பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது. அந்த உற்சாகம் இனிமேல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வத்தை தந்திருக்கிறது. “பரஞ்சோதி”யாக சுந்தரபாண்டியனில் ஆரம்பித்த என் பயணம், “பரமனாக” 'தங்க ரதம்' படத்தில் வளர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். என்கிறார் சவுந்தர்ராஜா.