சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து சென்னை மெரீனா கடற்கரையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இதனை மெரீனா புரட்சி என்றே அழைக்கிறார்கள். இப்போது இந்த போராட்டத்தை அடிப்படையாக கொண்டும். போராட்ட காட்சிகளை பயன்படுத்தியும் ஜல்லிக்கட்டு: 5-23 ஜனவரி 2017 என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. அகிம்சா புரொடக்ஷன் சார்பில் நிருபமா தயாரித்துள்ளார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார் ரமேஷ் விநாயகம் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:
மெரீனாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய அளவில் உருவானபோது அதை படமாக்க முடிவு செய்தேன். இதற்காக தினமும் நான்கைந்து கேமராக்கள் கொண்டு எனது குழுவினர் படம் பிடித்தார்கள். ஜல்லிகட்டு போராட்டத்தில் தீவிரமாக இருந்து நான்கைந்து இளைஞர்களை தினமும் படம் பிடித்தேன். போராட்டம் முடிந்த பிறகு எடுத்த காட்சிகளை போட்டுப்பார்த்தபோது இதை ஒரு திரைப்படமாக மாற்றலாம் என்று முடிவு செய்தேன். எகிப்தில் நடந்த மக்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு கிளாஷ் என்ற படம் வெளிவந்திருந்தது. அந்த இன்ஸ்பிரேசனில் இந்தப் படத்தை உருவாக்கினேன்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வந்த ஒவ்வொரு இளைஞர்களுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும். அந்த கதையை கற்பனையாக உருவாக்கி போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களையே நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளார். என் மனைவி நிருபமா தயாரித்துள்ளார். நண்பர்கள் உதவி செய்துள்ளனர். படத்தின் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. என்றார் சந்தோஷ்.