விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
'பாகுபலி 2' படம் மூலம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் ராஜமௌலி தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு இயக்குனராக மாறிவிட்டார். அவருடைய இயக்கத்தில் நடிக்கப் பலரும் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து பல முறை கேள்வி கேட்கப்பட்ட போதும் இப்போதைக்கு முடிவு செய்யவில்லை என்றே பதிலளித்து வந்தார் ராஜமௌலி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய அடுத்த படம் குறித்த கேள்விக்கு கொஞ்சமாக பதிலளித்திருக்கிறார். “என்னுடைய அடுத்த படம் 'பாகுபலி 2' போன்று விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகம் உள்ள படமாக இருக்காது. என்னுடைய அப்பாவிடம் உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒரு கதையை எழுதும்படி கேட்டிருக்கிறேன். அவர் அந்தக் கதையை எழுதி முடித்ததும்தான், அதில் யார் யார் நடிப்பார்கள் என்பதை முடிவு செய்வேன். உணர்வுகளை மையப்படுத்திய படங்களை எடுப்பது தான் எனது விருப்பம்,” என்று பதிலளித்திருக்கிறார்.
ஏற்கெனவே பல ஹீரோக்கள் ராஜமௌலி படத்தில் நடிப்பதற்கு அவருக்கு தூது அனுப்பியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்தன. பிரம்மாண்டமானப் படமாக இல்லை என்றாலும் பிரமாதமான படமாக அவர் எடுத்துவிடுவார் என்பதுதான் அவர்களது நம்பிக்கை. ஆர்வமுடன் இருப்பவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பது ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் கதை எழுதி முடித்த பிறகே தெரியும்.