ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள படம் "ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்". அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி போஹன்கர் என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை டி. இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 23 ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் மிகபிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழக அரசுக்கு சொந்தமான கலைவாணர் அரங்கம் சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது.
முன்பைவிட கம்பீரமாக காட்சியளிக்கும் கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டு பல மாதங்களாகியும் அங்கே விழா நடைபெறவில்லை. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் பூஜை மற்றும் இசை வெளியீட்டு விழா எப்போதும் புதுமையாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது. தவிர யாரும் யூகிக்காத இடங்களில் விழா நடத்தப்படும்.
இந்நிறுவனத்தின் அரவான் படத்தின் இசை வெளியீட்டை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தினார்கள். தற்போது யாருமே விழா நடத்தாத கலைவாணர் அரங்கத்தில் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டை நடத்துகின்றனர்.
அம்மா கிரியேசனின் வெள்ளி விழா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.