ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள படம் "ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்". அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி போஹன்கர் என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை டி. இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 23 ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் மிகபிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழக அரசுக்கு சொந்தமான கலைவாணர் அரங்கம் சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது.
முன்பைவிட கம்பீரமாக காட்சியளிக்கும் கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டு பல மாதங்களாகியும் அங்கே விழா நடைபெறவில்லை. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் பூஜை மற்றும் இசை வெளியீட்டு விழா எப்போதும் புதுமையாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது. தவிர யாரும் யூகிக்காத இடங்களில் விழா நடத்தப்படும்.
இந்நிறுவனத்தின் அரவான் படத்தின் இசை வெளியீட்டை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தினார்கள். தற்போது யாருமே விழா நடத்தாத கலைவாணர் அரங்கத்தில் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டை நடத்துகின்றனர்.
அம்மா கிரியேசனின் வெள்ளி விழா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.