ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடிக்கும் காலா படத்தில் அவரது மனைவியாக நடிக்கிறார் மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ். அவரைப் பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்...
அழகும் திறமையும் இருந்தும் அதிக படங்களில் நடிக்காதவர் ஆந்திராவைச் சேர்ந்த ஈஸ்வரி ராவ். 1990ம் ஆண்டு கவிதை பாடும் அலைகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு நாளைய தீர்ப்பு, ராமன் அப்துல்லா, குருபார்வை, சிம்மராசி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அப்பு, குட்டி, விரும்புகிறேன். படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே ஹீரோயின் வாய்ப்புகளை இழந்து குணசித்ர நடிகையானார். திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் தெலுங்கில் தொடர்ந்து குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் நேனு லோக்கல் படத்தில் நானியின் அம்மாவாக நடித்தார்.
காலா படத்தில் ரஜினியின் வயதான கேரக்டரில் அவரது மனைவியாக நடிக்க ஈஸ்வரிராவை தேர்ந்தெடுத்தார் தனுஷ். இதுகுறித்து ஈஸ்வரி ராவ் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் நான் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தபோது கூட நினைக்கவில்லை. ஆனால் கடவுள் எனக்கு இப்படி வாய்ப்பை கொடுத்திருக்கிறான். என்னை விட என் குழந்தைகளுக்குதான் பெரிய ஷாக்காக இருந்தது. அவர்களுக்கு பிடித்த ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்பதை அவர்கள் இன்னும் முழுசாக நம்பவில்லை. என்னுடைய கேரக்டர் பற்றி விரிவாக சொல்ல முடியாது. அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார் ஈஸ்வரி ராவ்.