ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டி.ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் வீராச்சாமி. அதன் பிறகு கிராமத்து காதலை மையமாக கொண்டு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. இந்த நிலையில் டி.ராஜேந்தர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் மலேசியாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் மகன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினை ஆடிசன் வைத்து தேர்வு செய்து முடித்துள்ளார். வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், என சகலமும் அவர் தான். ஒளிப்பதிவை மட்டும் இன்னொருவர் கவனிக்கிறார். டி.ராஜேந்தரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தக்கால டிரண்டுக்கு ஏற்ற மாதிரி சஸ்பென்ஸ் திரில்லர் படம். படப்பிடிப்பில் 50 சதவிகிதம் மலேசியாவிலும், மீதி 50 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கிறது. காணாமல் போன தன் காதலியை தேடி பயணிக்கும் ஒருவனது கதை என்கிறார்கள். கவன் படத்திற்கு பிறகு நடிப்பிலும் பிசியாகி விட்டார் டி.ராஜேந்தர். பேரரசு இயக்கும் படத்தில் விஷாலுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.