பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
செல்வா இயக்கிய புதையல் படத்தில் நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து மீண்டும் தற்போது செல்வா இயக்கி வரும் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அரவிந்த்சாமி. இப்படத்தின் தலைப்பு மாறயிருப்பதாக படப்பிடிப்பு தொடங்கியபோது கூறப்பட்டது. ஆனால், எதற்கும் தலைவணங்காத நேர்மையான போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடிப்பதால் வணங்காமுடி தான் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று இப்போது அந்த தலைப்பையே படத்திற்கு வைத்து விட்டனர். இந்நிலையில், நேற்று வணங்காமுடி படத்தின் பர்ஸ்ட் லுக்கு வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த படத்தின் முதல் பாதியில் சமூக விரோதிகளை அதிரடியாக களையெடுக்கும் அரவிந்த்சாமி, ஒரு கட்டத்தில் எதிரிகளால் தாக்கப்பட்டு மெமரிலாஸ் ஆகி விடுவாராம். அதன்காரணமாக அவரை கொல்வதற்காக துரத்துபவர்களை யார் என்றே அவருக்கு அடையாளம் தெரியாதாம். அப்போதுதான் அவரது தோழியான இன்னொரு போலீஸ் அதிகாரி சிம்ரன் களமிறங்கி அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறாராம். வணங்காமுடியில், சிம்ரனுக்கும் அதிரடியான போலீஸ் வேடம் கொடுத்திருக்கிறார் செல்வா என படக்குழு வட்டாரத்தில் பேசப்படுகிறது.