ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் மது அருந்த மாட்டார், புகை பிடிக்க மாட்டார். அதுபோல இறந்தது போல நடிக்க மாட்டார் அதற்கு காரணமாக அமைந்தது பாசம் என்ற படம்.
1962ம் ஆண்டு வெளியான பாசம் படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கினார். இதில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி, அசோகன், ஷீலா, கல்யாண குமார், டி.ஆர்.ராமச்சந்திரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். ஜல் ஜல் என சலங்கையொலி... பால் வண்ணம் பருவம் கண்டேன்..., உலகம் பிறந்தது எனக்காக..., உறவு சொல்லி ஒருவரின்றி வாழ்பவன்... உள்ளிட்ட தேன் சொட்டும் பாடல்கள் இருந்தும் படம் வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம் கதைப்படி எம்.ஜி.ஆர் இறந்து விடுவதுதான்.
அவர் இறந்த காட்சியை பார்க்க பிடிக்காமல் மக்கள் தியேட்டருக்கு செல்லவில்லை. இதனால் இனி இறப்பது போன்று நடிப்பதில்லை என்று எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். இந்தப் படத்திற்கு முன்பு எம்.ஜி.ஆர் 1956ல் வெளிவந்த மதுரை வீரன் படத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு இறந்து விடுவார். ஆனால் அந்தப்படம் வெற்றி பெற்றது. காரணம் அந்த கதை மக்களிடையே இருந்த கதை. மதுரைவீரன் பொன்னி கதையை அவர்கள் கேட்டிருந்தார்கள். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரை மதுரை வீரனாக பார்த்தார்கள்.