ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் மது அருந்த மாட்டார், புகை பிடிக்க மாட்டார். அதுபோல இறந்தது போல நடிக்க மாட்டார் அதற்கு காரணமாக அமைந்தது பாசம் என்ற படம்.
1962ம் ஆண்டு வெளியான பாசம் படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கினார். இதில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி, அசோகன், ஷீலா, கல்யாண குமார், டி.ஆர்.ராமச்சந்திரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். ஜல் ஜல் என சலங்கையொலி... பால் வண்ணம் பருவம் கண்டேன்..., உலகம் பிறந்தது எனக்காக..., உறவு சொல்லி ஒருவரின்றி வாழ்பவன்... உள்ளிட்ட தேன் சொட்டும் பாடல்கள் இருந்தும் படம் வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம் கதைப்படி எம்.ஜி.ஆர் இறந்து விடுவதுதான்.
அவர் இறந்த காட்சியை பார்க்க பிடிக்காமல் மக்கள் தியேட்டருக்கு செல்லவில்லை. இதனால் இனி இறப்பது போன்று நடிப்பதில்லை என்று எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். இந்தப் படத்திற்கு முன்பு எம்.ஜி.ஆர் 1956ல் வெளிவந்த மதுரை வீரன் படத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு இறந்து விடுவார். ஆனால் அந்தப்படம் வெற்றி பெற்றது. காரணம் அந்த கதை மக்களிடையே இருந்த கதை. மதுரைவீரன் பொன்னி கதையை அவர்கள் கேட்டிருந்தார்கள். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரை மதுரை வீரனாக பார்த்தார்கள்.