ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிம்ரன். ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு விஐபி, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி உள்பட பல படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகை ஆனார். ஆனால் புகழின் உச்சியில் இருக்குமோபோதே திருமணம் செய்து கொண்டது அவருக்கு சறுக்கலாக அமைந்து விட்டது. அதன் பிறகு அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை.
சில படங்களில் குணசித்திர நடிகையாக நடித்தார், சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்தார். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். தனது நிபந்தனைகளை அனைத்தையும் தளர்த்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தல் கவுரவ தோற்றத்தில் நடித்த அவர், தற்போது செல்வா இயக்கும் வணங்காமுடி படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம், மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்திருக்கிறார். இன்னும் டைட்டில் வைக்காத இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் குற்றாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சிம்ரன். அவர்தான் சிவகார்த்திகேயனின் வில்லி என்று கூறப்படுகிறது.
தனது கேரக்டர் பற்றி சிம்ரன் கூறும்போது "ஒரு நல்ல சுறுசுறுப்பான இளம் டீமுடன் இணைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனது கேரக்டரை பற்றி விரிவாக கூறமுடியாது. பவர்புல்லான கேரக்டர். இதுவரை பார்த்திராத சிம்ரனை பார்க்கலாம். படப்பிடிப்பில் கலந்து கொள்ள விரைவில் குற்றாலம் செல்கிறேன்" என்கிறார் சிம்ரன்.