ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு, நடிகர் ரஜினிகாந்த்தை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வேண்டும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்துமாறு கேட்டு கொண்டார்.
ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, "ரஜினி, தான் அறிவித்தபடியே, நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகத் தெரிவித்தார். அதனை பிரதமரிடம் வழங்கக் கூறினோம். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்க வேண்டும் என ரஜினி சொன்னார்" என்றார்.