ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் இயக்குனர் பீம்சிங் குடும்ப பாங்கான படங்களுக்கு புகழ் பெற்றவர். அவர் ஒரு காலத்தில் தனது படங்களுக்கு ப வரிசையில் தான் தலைப்பு வைத்தார். அவர் அப்படி வைத்த படங்கள் அனைத்திலும் சிவாஜி நடித்தார். அவைகள் வெற்றி பெறவும் செய்தன.
பதிபக்தி, பாகபிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பந்த பாசம், பார்த்தால் பசிதீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பாலாடை, பாதுகாப்பு இப்படி பல படங்களை இயக்கினார் இதற்கு ஒரு காரணம் உண்டு.
ப வரிசை படங்களுக்கு முன்பு பீம்சிங் அம்மையப்பன், ராஜா ராணி, நானே ராஜா, திருமணம் என 4 படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் வெற்றி பெறவும் இல்லை, பீம்சிங்கை அடையாளம் காட்டவும் இல்லை. சிவாஜி நடிப்பில் அவர் இயக்கிய பதிபக்தி என்ற படமே அவருக்கு முதல் வெற்றியை கொடுத்தது. பத்திரிகைகள் பாராட்டி எழுதின. ஒரு பத்திரிக்கையில் ஒரு ஜோதிடர் இப்படி எழுதினாராம்... "பீம்சிங்கிற்கு ப தான் ராசியான எழுத்து ஆனால் அவருக்கு சுழி எழுத்து ஆகாது. தன் பெயரில் உள்ள முதல் எழுத்தான பீ என்பதில் சுழியை நீக்கிவிட்டு பம்சிங் என்று மாற்ற வேண்டும். இல்லையேல் தன் படங்களின் தலைப்பை ப வரிசையில் தொடங்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று எழுதினாராம்.
இன்னொரு பத்திரிக்கை விமர்சனத்தில் "பீம்சிங் இந்த படத்தில்தான் எழுந்து நிற்கிறார்" என்று எழுதியதாம். இதனாலேயே பீம்சிங் தன் படங்களுக்கு ப வரிசையில் பெயர் வைத்தார். ஆனாலும் இடையிடையில் சகோதரி, களத்தூர் கண்ணம்மா, செந்தாமரை, சாந்தி, சாது மிரண்டால் என்றும் டைட்டில் வைத்தார்.